'📵Mobiles not allowed'.. 'Security Code'.. '👕👗Dress Code'.. நயன் - விக்னேஷ் சிவன் திருமணத்தில் இத்தனை கட்டுப்பாடுகளா ?
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார்.
கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த இவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் நிறைய சங்கடங்கள், தோல்விகள் இதனால் வந்த அவப்பெயர்கள் என ஏராளம்.
அத்தனையும் சகித்து வந்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய இவர், கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.
இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார். விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறி இருந்தார்.
இந்நிலையில், அடிக்கடி கோவில்களுக்கு விசிட் அடித்து வரும் இவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தனர்.
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ஜுன் 9ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மகாபலிபுரத்தரில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திரையுலக பிரபலங்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைத்தனர்.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், தனக்கும் நயன்தாராவிற்கும் நடக்கவிருக்கும் திருமணம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‘லைஃப்ல அடுத்த கட்டத்துக்கு போகப்போறோம். எனது காதலி நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். எங்களது திருமணம் வருகிற ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. அன்று மதியம் எனது சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படம் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்த விக்னேஷ் சிவன், திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜூன் 11ம் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். இந்த பிரஸ் மீட் வீடியோ செம வைரல் ஆகி வந்தது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி உள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சூர்யா, அஜித், கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு மெஹந்தி சங்கீத் நிகழ்ச்சியுடன் இவர்களது திருமண நிகழ்ச்சி துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் விதவிதமாக போட்டோக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளதாம். இந்த போட்டோக்கள் வெளியாகி செம டிரெண்டாகி உள்ளன.
இந்நிலையில், லேட்டஸ்ட் தகவலாக, திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாம். திருமணத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக மொபைல் போன்கள் கொண்டு வர கூடாது, திருமண நிகழ்வுகளை ஒளிபரப்பும் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதால் திருமணம் தொடர்பான வீடியோவோ, போட்டோவோ வெளியில் எதுவும் கசிந்து விடக்கூடாது என்பதற்காக போட்டோக்கள் வீடியோக்கள் எடுக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ‘Security Code’ அழைப்பிதழுடன் வழங்கப்படும் என்றும், அந்த Security Code வெரிஃபிகேசனுக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று புதிய செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இதில் பங்கேற்க அனைவரும் அணிந்த வர வேண்டிய உடை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.