இறப்பதற்கு முன் மயில்சாமி வைத்திருந்த பணம் இவ்வளவு தானா..? வெளியான ஷாக்கிங் தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் சிவராத்திரி இரவு அன்று கேளம்பாக்கம் மேகாநாதீஸ்வரர் கொயிலுக்கு சென்று சிறப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்
இந்த சம்பவம் தமிழ் சினிமாத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. மயில்சாமி மரணம் குறித்து பல தவறான கருத்துக்கள் வெளியாகி வந்த நிலையில், மயில்சாமி மகன்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், மயில்சாமி கடைசியாக நடித்திருந்த கிளாஸ்மேட் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் மகன்கள் கலந்து கொண்டு பேசியிருந்தனர். அதில், அப்பா செய்து வந்த உதவிகளை நாங்களும் செய்வோம், அவரது போன் எப்போதும் ஸ்விட்ச் ஆஃப் ஆகாது என்றும் தெரிவித்தனர்.
மேலும், அவர் இறக்கும் நடித்த படத்தின் சம்பளமாக 30 ஆயிரம் ரூபாய் தொகை கிடைத்திருக்கிறது. அதில் 25 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு உதவியாகவும், 4 ஆயிரம் ரூபாயை அசிஸ்டெண்ட்களுக்கும் கொடுத்துள்ளார். மீதமுள்ள 1000 ரூபாயை மகன்களுக்கு கொடுத்ததாகவும், சட்டை பாக்கெட்டில் வெறும் 30 ரூபாய் மட்டுமே வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.