ரவீந்தருடன் எடுத்த செல்பியை பகிர்ந்த மஹாலக்ஷ்மி.. இதுல double-meaning கேப்ஷன் வேற..
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் டாபிக்காக வலம் வருவது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமண விஷயம் தான். ரவீந்தர் சந்திரசேகரன், தமிழ் திரையுலகில் சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ், கொலை நோக்கு பார்வை, கல்யாணம் போன்ற பல திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக வலம் வருபவர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி அவர்களை திருமணம் செய்து கொண்டார். படிக்கும் காலத்திலேயே கலை துறையில் அடியெடுத்து வைத்த இவர், நிறைய சீரியல்களில் நடித்துள்ளார்.
முக்கியமாக பல தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பே வா, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் போன்ற பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது, ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்குமே இது 2வது திருமணம். இந்நிலையில், இவர்கள் திருமணம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் புகைப்படங்கள் ஏதாவது பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் தான், இன்ஸ்டாவில் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்தளவிற்கு இருவரும் வைரல் ஜோடிகளாக ஆகி விட்டனர்.
ரவீந்தர், மகாலட்சுமி தம்பதியினர் தாங்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும், தங்களின் காதல் குறித்த பதிவுகளையும் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில்
நேற்று ஞாயிற்றுக்கிழமையை தனது கணவருடன் கலக்கலாக கழித்துள்ளார் மகாலட்சுமி. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வரும் லவ் டுடே படத்திற்கு சென்றுள்ளனர். அப்போது எடுத்த செல்பியை டபுள் மீனிங் கேப்ஷனுடன் ஷேர் செய்துள்ளார்.
அதாவது மகிழ்ச்சியாக இருக்க, “Love Today”யில் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். லவ் டுடே படத்தையும், காததலில் இருக்க வேண்டும் என்பதையும் இரட்டை அர்த்தத்தில் குறிபிட்டுள்ளார் மகாலட்சுமி. இதனை பார்த்த ரசிகர்கள் எப்போதும் இதே அன்பில் இருங்கள் என வாழ்த்தி வருகின்றனர்.