'பஞ்சாங்கம் பார்த்து ராக்கெட் அனுப்புறாங்க' - மாதவன் பரபரப்பு பேச்சு.. 'இது எனக்கு தேவை தான்' விளக்கமளித்த நடிகர் மாதவன் !

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

ஒரு காலத்தில் பேவரைட் க்ரஷ், சாக்லேட் பாயாக இருந்தவர் நடிகர் மாதவன். தற்போது அவ்வளவு திரைப்படங்களில் நடிக்காத மாதவன், முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்’.

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எடுத்துள்ள படம் தான் இது. நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

கான்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராக்கெட்டரி திரைப்படத்தை இந்திய அரசு சார்பில் World Premiere ஆக ரிலீஸ் செய்தனர். கடந்த சம்மருக்கே வெளியாகவிருந்த ராக்கெட்ரி-தி நம்பி எஃபெக்ட் திரைப்படம், கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில், வரும் ஜூலை 1ம் தேதி இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் சார்பில் உலகமெங்கும் ரசிகர்களுக்காக ராக்கெட்டரி திரைப்படம் தியேட்டரில் வெளியாக போகிறது.

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் நடிகர் மாதவன், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் உரையாடிய பிறகு, படத்தின் முழு ஸ்கிரிப்டையும் மாற்ற வேண்டியிருந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

உளவு பார்த்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட விஞ்ஞானி நீதி பெற பல ஆண்டுகள் போராடினார் என்பதை மையமாக வைத்து படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

நம்பி நாராயணன் அவர்களை சந்தித்து பேசிய பிறகு தான், அமெரிக்காவில் உள்ள லீக் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதும், மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுடன் பணிபுரிந்த அனுபவமும் அவருக்குத் தெரிந்தது என்றும் மாதவன் கூறினார்.

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

மேலும் நம்பி நாராயணனின் கண்ணீரைப் பார்த்த அன்றுதான் இந்தக் கதையை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக அவர் கூறியதாக கூறப்படுகிறது. விஞ்ஞானி நம்பி நாராயணன் போதிய அங்கீகாரம் கிடைக்காமல், பொய்யான குற்றச்சாட்டினால் அவரது குடும்பம் சந்தித்த அவமானத்தை உணர முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

உண்மையை நிரூபிக்க போராடும் விஞ்ஞானியின் கண்களில் கண்ணீரைப் பார்த்தபோது கதையை திரைப்படமாக்க முடிவு செய்ததாக நடிகர் மாதவன் மனம் திறந்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றபோது மாதவன் கூறியதாவது, “விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார். அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது” என அவர் கூறியுள்ளார்.

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

மேலும் மாதவனிடம், பழைய பஞ்சாங்கத்துக்கும் இன்றைய ராக்கெட்ரிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மாதவன் அளித்த பதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு பதிலளித்த மாதவன் கூறியதாவது, “ரொம்ப நல்ல கேள்வி, உண்மையிலேயே ரெண்டுக்கும் தொடர்பு இருக்கு. பூமியில் இருந்து மார்ஸுக்கு செயற்கைகோள் அனுப்பறதுக்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா எல்லாம் பல மில்லியன் செலவு செய்து, 30வது முறை, 32வது முறை என்று பலமுறைய முயற்சி செய்து தான் வெற்றி பெற்றார்கள்.

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

எல்லா நாடுகளும் செவ்வாய் கிரகத்துக்கு போறதுக்கு பலநூறு மில்லியன் டாலர்கள செலவு பண்ணினார்கள். ஆனால் 2014ல் இந்தியா சார்பில் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அணுப்பினார்கள். நம்முடைய பஞ்சாங்கத்தில் இருக்கும் வான வரைபடத்தில் கிரகங்கள் எல்லாம் எங்கே இருக்கிறது, அதனுடைய ஈர்ப்பு விசை எப்படி இருக்கிறது என எல்லாமே ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வச்சிட்டாங்க.

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

அந்த பஞ்சாங்கத்தில் இருக்கும் தரவுகளை வைத்து தான் குறிப்பிட்ட நேரத்தில சரியான மைக்ரோ செகண்ட்ல ஸ்ரீ ஹரிக்கோட்டாவில் இருந்து இந்த ராக்கெட்டை அனுப்பினார்கள். ஆயிரம் வருடத்துக்கு முன்வே எழுதப்பட்ட இந்தத் தரவுகள் தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதைக்குள்ள நம்ம செயற்கைகோள் வெற்றிகரமாக செல்ல உதவியாக இருந்தது. நம்மிடம் இருந்த கம்மியான் பட்ஜெட்ல, குறைவான சக்தி கொண்ட இஞ்ஜினை வச்சிக்கிட்டு இந்த mission சக்சஸ் ஆச்சுன்னா அதற்கு பஞ்சாங்கம் தான் காரணம்’ என கூறினார்.

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

மாதவனின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி, பலரும் ட்ரோல் செய்து மீம் போட ஆரம்பித்துள்ளனர். சிலர் மாட்டுசாணி மாதவன் என்றெல்லாம் கிண்டலடித்துள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மாதவனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, பஞ்சாங்கத்தை வைத்துகொண்டு தற்போது செவ்வாய் கிரகத்துக்கு செல்வது என்பது முடியாத காரியம் என கூறி உள்ளார்.

Madhavan speech about rocketry science and panchangam getting viral on social media

இதனால் வெளியாகும் ட்ரோல்களுக்கு, பதிலளித்த மாதவன், அவரது அறிக்கையில், “பஞ்சத்தை தமிழில் “பஞ்சாங்” என்று அழைத்ததற்கு நான் தகுதியானவன். என்னைப் பற்றி மிகவும் அறியாதவர். செவ்வாய்ப் பயணத்தில் வெறும் 2 இன்ஜின்கள் மூலம் நாம் சாதித்ததை இது எடுத்துச் சொல்ல முடியாது. @NambiNOfficial விகாஸ் என்ஜின் ஒரு ராக்ஸ்டார். என எழுதியுள்ளார்.

Share this post