மருதநாயகமாக மாறிய கமல்.. உலகநாயகன் பேசிய வசனங்களை பார்த்து சிலிர்த்து நின்ற லோகேஷ்
களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நம் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர். 4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம்.
கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 350 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது.
இப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 1 மாதத்திற்கும் மேல் ஆன நிலையிலும், இப்படத்தின் vibes இன்னும் குறையவில்லை என்பதே உண்மை. விக்ரம் படம் முழுவதும் லோகேஷின் பேன் பாய் சம்பவமாக அமைந்தது குறித்து அனைவர்க்கும் தெரியும்.
இந்நிலையில் படப்பிடிப்பின் போது கமல் ஹாசன் அவர்களுடன் உரையாடியது குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதாவது கமலின் கனவு படமான மருதநாயகம் குறித்து பேசும் போது, அந்த படத்தில் கமல் தனது கனவு நாயகனாக மாறிவிடுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருமுறை மதிய உணவு சாப்பிடும்போது மருதநாயகம் படம் குறித்து பேசுகையில், லோகேஷ் கனகராஜ் சாப்பிட்ட கையுடன் எழுந்து நின்று உலகநாயகன் பேசிய வசனங்களை கண் சிமிட்டாமல் பார்த்ததாக கூறியுள்ளார். அதோடு மருதநாயகம் படத்தை கமல் சார் என்னிடம் கொடுத்து இயக்கச் சொன்னால் நிச்சயம் ஏற்க மாட்டேன் அது அவருடைய உழைப்பு என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.