PRANKனாலும் இப்படியா அழுக வைப்பீங்க ? பிரபல நிகழ்ச்சியில் அழுத நடிகை கீர்த்தி ஷெட்டி ! Viral Video
படிக்கும் காலம் முதலே விளம்பர படங்களில் நடித்து வந்தவர் நடிகை கிருத்தி ஷெட்டி.
இதன் மூலம் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியது. இதன் மூலம் பாலிவுட் திரைப்படமான Super 30 என்னும் படத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மொழியில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார். Uppena என்னும் திரைப்படத்தில் நடித்த இவர், ஷ்யாம் சிங்க ராய் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, Bangarraju என்னும் திரைப்படத்தில் நடித்தார்.
தற்போது, Aa Ammayi Gurinchi Meeku Cheppali, வாரியர், Macherla Niyojakavargam உள்ளிட்ட தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மிக விரைவில், தமிழ் மொழியில் அறிமுகமாகவிருக்கும் கிருத்தி ஷெட்டி, பாலா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில், அவ்வப்போது தனது ஹாட் மற்றும் க்யூட் புகைப்படங்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். மேலும், இவரது bullet பாடல் வீடியோ தற்போது செம வைரல் ஆகி உள்ளது. பல இளசுகளுக்கு கிரஷ் ஆக இருந்து வருகிறார் இவர்.
சமீபத்தில், விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற போது, அந்த தொகுப்பாளர்கள் பேட்டியின் போது பிராங்க் செய்துள்ளனர். அப்போது இரு தொகுப்பாளர்கள் இருவரும் சண்டை போடுவது போல பிராங்க் செய்துள்ளனர்.
பின்னர் அதனை பிராங்க் என கீர்த்தியிடம் கூறிய பின்பு சிரித்துக்கொண்டே சொன்னவுடன், நடிகை கீர்த்தி அழுதுள்ளார். தாம் கடுமையாக பேசி கேட்டாலே அழுதுவிட கூடியவர் என கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.