“1 நாள் நேரில் சந்திக்க ரூ.1.5 லட்சம்.. 15 நிமிஷம் வீடியோ கால் பேச 13 ஆயிரம்" அதிர்ச்சி கிளப்பிய நடிகை கிரண் !
கவர்ச்சி என்றாலே இவர் பெயர் நியாபகம் வரும்படி சமூக வலைத்தளங்களில் அதகளம் செய்து வருபவர் நடிகை கிரண் ரத்தோட். தனது கல்லூரி படிப்பு முடிந்த கையுடன் ஹிந்தி பாப் ஆல்பம்களில் நடனமாட தொடங்கியவர் இவர். இதன் மூலம், இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கதவை தட்ட தொடங்கியது.
பாலிவுட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஜெமினி திரைப்படத்தில் க்யூட் சேட்டு பொன்னாக நடித்தவர் தான் இந்த கிரண். பின்னர், வின்னர், அன்பே சிவம், அரசு, தென்னவன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
அப்போதே, திருமலை, திமிரு, ராஜாதி ராஜா, போன்ற திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு ஆடாத் தொடங்கினார். அதன் பின்னர், நாட்கள் ஓட ஓட வெயிட் போட்டு ஆளே வேற மாதிரி மாறிவிட்டார். முத்தின கத்தரிக்காய், ஆம்பள போன்ற சில படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம் என கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு மாறிய இவர், தனது சமூக வலைத்தளங்களில் முக்கால்வாசி நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோ போட்டு வருகிறார். தற்போது, திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி இருக்கும் கிரண், ஆடையை கையளவு அணிந்து இவர் பதிவிடும் போட்டோக்களுக்கு பலரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தொடர்ந்து, தனக்கென தனியாக இணையதளம் மற்றும் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த இணையதளம் மற்றும் ஆப் மூலம் தனது புகைப்படங்களை விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகிறாராம் கிரண். இந்த ஆப்பில் நடிகை கிரானிடம் பேச, தனிப்பட்ட புகைப்படங்களை பார்க்க, வீடியோ கால் பேச பணம் கட்ட வேண்டும்.
கிரணை நேரில் சந்தித்து பேச ரூ.1.5 லட்சம், 10 நிமிட வீடியோ கால் ரூ.15 ஆயிரம், இன்பாக்ஸில் கிரணின் ஹாட் புகைப்படங்களை பெற ரூ.1999, கிரணின் இன்ஸ்டாகிராமில் இல்லாத சில புகைப்படங்கள், இன்பாக்ஸில் கிரணின் இரண்டு ஸ்பெஷல் ஸ்னாப்களுக்கு ரூ.999, வீடியோ கால் 25 நிமிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் வீடியோ கால் 15 நிமிடங்களுக்கு ரூ.13 ஆயிரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை வெளிவராத கிரணின் கவர்ச்சி புகைப்படம் வேண்டுமென்றால் 2000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்படி விதவிதமாக கட்டணங்கள் வசூல் செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகிறார் கிரண். இப்படி ஒரு செயலில் இவர் ஈடுபட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.