'KGF - 3 இப்போதைக்கு இல்லை.. அது வெறும் வதந்தி..' தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

Kgf 3 wont be starting in nearby social media information are fake said by hombale films producer

2018ம் ஆண்டு கேங்ஸ்டர் படமாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் KGF. இப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றி பெற்றதால் இப்படத்தின் 2ம் பாகத்தை பெரும் பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுவிட்டது.

பான் இந்தியா படமாக தயாரான இப்படத்தின் 2ம் பாகம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகமெங்கும் 10 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்டன. வெளியாகி வெகு சில நாட்களிலேயே 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் 3ம் பாகமும் படக்குழு அறிவித்தனர்.

Kgf 3 wont be starting in nearby social media information are fake said by hombale films producer

இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலும் அடுத்தடுத்து வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தொடங்கி 2024ம் ஆண்டு வெளியாகும் என படக்குழு சார்பில் சொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரல் ஆனது.

இதுகுறித்து, தற்போது தயாரிப்பாளரே விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கே.ஜி.எப் 3 இப்போதைக்கு தொடங்கவில்லை.

அது வெறும் வதந்தி. கண்டிப்பாக தொடங்கும் போது நாங்களே அறிவிப்போம் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

KGF 1 2018ம் ஆண்டு வெளியான பின், இதன் 2ம் பாகம் தற்போது 2022ம் ஆண்டு வெளியானது. இதுபோல, இன்னும் நாட்கள் தள்ளி இப்படம் வெளியாகுமா அல்லது என்ன காரணம் என குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

Share this post