மகேஷ் பாபுவை முகத்தில் அடித்த கீர்த்தி சுரேஷ்.. பதட்டமான கீர்த்தி..
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான மகாநதி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகையும், ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
மகேஷ் பாபு ஜோடியாக இவர் நடிப்பில் தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் சர்க்காரு வாரிப்பாட்டா. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் குறித்து கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளது வைரல் ஆகி வருகிறது. ஷூட்டிங்கின் போது, தவறுதலாக நடிகர் மகேஷ் பாபுவின் முகத்தில் கீர்த்தி சுரேஷ் தவறுதலாக அடித்திவிட்டாராம்.
காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கும் போது, எனக்கே தெரியாமல் தீடீரென அப்படி நடந்து விட்டது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்பின் மகேஷ் பாபுவிடம் கீர்த்தி மன்னிப்பு கேட்டாராம். அதற்கு மகேஷ் பாபு, தெரியாமல் நடந்த விஷயம் தானே, ஒன்றும் இல்லை’ என பெருந்தன்மையாக கூறிவிட்டாராம்.