விக்ரம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட இந்த முக்கிய வரிகள்.. மறைமுகமாக அரசியலை சுட்டிக்காட்டினாரா ?
அரசியல், நடிப்பு, பிக் பாஸ் என பிசியாக வலம் வந்த கமல் ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகியுள்ளது விக்ரம் திரைப்படம்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றது.
தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் ஆரவாரத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் தொழில் செய்யும் விஜய் சேதுபதி, சீக்ரெட் ஏஜென்ட்டாக கமல் ஹாசன், கமல் வளர்ப்பு மகனாக காளிதாஸ், உளவாளியாக பகத் பாசில் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை நேர்த்தியாக தந்திருக்கின்றனர்.
செம பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற்று வரும் விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்பாடலை கமல் அவர்களே எழுதி பாடியுள்ளார். சென்னை தமிழில் கமல் பாடி வெளியான இப்பாடலில் அரசியல் வரிகள் இடம்பெற்றுள்ளது.
பாடல் வெளியாகி ஒரு சில தினங்களிலேயே இது பெரும் பேச்சுப்பொருளாக மாறியது.
‘கஜானாலே காசில்லே கல்லாலையும் காசில்லே காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே.! ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே ! சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே ! ‘
என்னும் வரிகள் மத்திய அரசை குறித்து பேசியது போல இருக்கிறது என்றும், இன்னும் சில வரிகள் ஜாதிய ரீதியாக பிரச்சனைகளை தூண்டும் வகையிலும், நிதிநிலைப் பற்றாக்குறையையும், கொரோனாவையும் மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதாக சொல்லப்பட்டது.
அந்த வரிகளை நீக்கக் கோரி நடிகர் கமல்ஹாசன், அனிருத், லோகேஷ் கனகராஜ், சோனி மியூசிக் கம்பெனி,ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் ஆகியோர்களுக்கு, ஆர்.டி.ஐ.செல்வம் சாா்பில் வழக்கறிஞர்கள் சென்னை சாிதா, திருநெல்வேலி துரைராஜ் மற்றும் மதுரை துரைராஜ் ஆகியோா் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர்.
இதையடுத்து, இந்த வரிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது.