கெஞ்சி கேட்டும் ‘தேவர் மகன்’ படத்தில் சிவாஜி ரோலில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. கமல் வெளியிட்ட உண்மை !
களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் கமல் ஹாசன். தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர்.
4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி, மஹேஸ்வரி, ரமேஷ் திலக் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் சார்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது.
சமீபத்தில் நடந்த விக்ரம் பட பிரமோஷன் நிகழ்ச்சி போது கமல் கூறிய ஒரு தகவல் செம வைரல் ஆகி வருகிறது. இந்நிகழ்ச்சியின் போது கமலஹாசன் தன் படத்தில் நடிக்க கேட்டு மறுத்த நடிகர் குறித்த தகவலை கூறியிருக்கிறார்.
கடந்த 1992ம் ஆண்டு கமல்ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தேவர்மகன். இப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக் 1997ம் ஆண்டு வெளிவந்தது.
அப்போது இந்த படத்தில் சிவாஜிகணேசன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமாரிடம் அணுகியுள்ளார். ஆனால், கமல்ஹாசன் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் நடிப்பதில்லை என்றும், தன்னுடைய முடிவை மாற்ற முடியாது என்றும் திலீப்குமார் கூறியதாக அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து, அந்த கதாபாத்திரத்தில் அம்ப்ரிஷ்புரி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது மீடியாவில் வைரலாகி வருகிறது.