புரமோஷன் நிகழ்ச்சி..! நயன்தார, விஜய் சேதுபதி தியேட்டர் விசிட்..! கடுப்பான விக்னேஷ் சிவன்..!
போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற ஹிட் படங்களை தொடர்ந்து, விக்னேஷ் சிவனுக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது காத்துவாக்குல ரெண்டு காதல் என்பதே உண்மை. விஜய் சேதுபதி ஹீரோவாக, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடித்துள்ள இப்படம் முழு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக அமைந்துள்ளது.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் khatija வாக சமந்தா, கண்மணியாக நயன், மற்றும் ராம்போ வாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
படத்தோட பெரிய ப்ளஸ் ஆக மியூசிக் அமைந்துள்ளது. செம காமெடி மற்றும் ஹீரோயின்ஸ்கள தேவதையா காமிச்சருக்காங்க. எதிர்பார்த்த அளவிற்கு இருக்கானு கேட்டா பக்கா காமெடி ட்ரீட் கொடுத்து ரசிகர்களை disappoint பண்ணல ங்கிறது தான் உண்மை.
காதல், செண்டிமெண்ட், டைலாக் டெலிவரி, பாசம், நகைச்சுவை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். முகம் சுளிக்கும் அளவிற்கு காட்சிகள் எதுவும் வைக்காமல், அழகாக மூவரின் காதல் கதையை கையாண்டுள்ளார்.
இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த நயன்தாரா, தற்போது படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அதை பார்க்க நயன்தாரா, விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், தேவி தியேட்டருக்கு வந்துள்ளார்.
நயன்தாராவை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். பலரும் தலைவி, லேடி சூப்பர் ஸ்டார் என கத்தி கூச்சல் போட்டனர். நயன்தாராவும் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.
இதை பார்த்த விக்னேஷ் சிவன் கோபமடைந்ததால், விரைவில் அங்கிருந்து கிளம்பி விட்டதாகவும் கூறுகின்றனர். மேலும், விக்னேஷ் சிவன் அடுத்தாக அஜித்தை வைத்து படத்தை நினைத்தால் பதறுகிறது என அஜித் ரசிகர்கள் ஒருபக்கம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.