இமான் பதிவை செல்ல பிராணிகளோடு ஒப்பிட்டு பதிவிட்ட இமான் முன்னாள் மனைவி ! வைரலாகும் பதிவு !
தமிழ் திரையுலகில் தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். இதனைத் தொடர்ந்து, விசில் படத்தில் ‘அழகிய அசுரா’ பாடல் வெற்றியைத் தொடர்ந்து, இவர் பிரபலமாக அறியப்பட்டவர்.
பின்னர், ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ள இமான், திருவிளையாடல் ஆரம்பம், கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களின் பாடலுக்காக பல விருதுகளை வென்றார்.
விஸ்வாசம், சீமராஜா, கடைக்குட்டி சிங்கம், டிக் டிக் டிக், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்ற பிரபல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவரது குரலுக்கும் இசைக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலுக்கு தேசிய விருதும் இமானுக்கு கிடைத்தது. விஸ்வாசம் பட இசையமைப்பிற்காக கலைமாமணி விருதை வென்றார்.
இசைத்துறையில் சாம்ராஜ்யமே உருவாகியுள்ள இமான் சொந்த வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது.
12 வருட திருமண வாழ்க்கையை மனைவி மோனிகாவோடு முடித்து கொள்வதாக, அவர்களை பிரிவதாக தனது சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.
நவம்பர் 2020ம் ஆண்டு முதல் பிரிந்து வாழும் இவர்கள், டிசம்பர் 2021ம் ஆண்டு சுமூகமாக பிரிந்தனர். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், இமான் 2வது திருமணம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன், எமிலி என்பவரை திருமணம் செய்த இவர், திருமண வரவேற்பு குறித்து புகைப்படம் ஒன்று வைரல் ஆனது.
இந்நிலையில், முன்னாள் மனைவி மீது குழந்தைகள் பாஸ்போர்ட் குறித்து இமான் பொய் வழக்கு போட்டதாக தகவல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. மேலும், இமானின் 2வது திருமணம் குறித்து அவரது முதல் மனைவி பதிவிட்ட பதிவு செம வைரல் ஆகி வந்தது.
அதில், இமான் 2ம் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் கூறி, வாழ்க்கையில் 12 வருடங்கள் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என் முட்டாள்தனம்.
அதற்காக வருத்தப்படுகிறேன் என கடுமையாக பதிவிட்டுள்ளார். பாதுகாப்பு குறித்து இவர் பேசியிருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இமானின் முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சர்ட் மார்ச் மாதம் போட்ட ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
விவாகரத்து பற்றி இமான் அளித்த பேட்டியின் யூடியூப் இணைப்பை வெளியிட்டு, மோனிகா கூறியுள்ளதாவது, கடந்த 2 ஆண்டுகளாக நீங்கள் உங்களின் மகள்களை பார்க்கவே இல்லை. நீங்கள் இறந்திருக்கலாம் என கூட அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் நீங்களோ, அவர்களுக்காக மறுமணம் செய்வதாக கூறுகிறீர்கள். இமான் நீங்கள் படங்களில் நடிக்கவும் தொடங்கலாம். திருமண வாழ்த்துக்கள் இமான் என பதிவிட்டது வைரல் ஆகி வருகிறது.
இமானின் திருமணத்தன்று மோனிகா போட்ட ட்வீட்டிலும், என் குழந்தைகளை நான் பாதுகாப்பேன், தேவைப்பட்டால் அந்த புதுக்குழந்தையையும் பாதுகாப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம், மோனிகா என்ன சொல்ல வருகிறார். வேறு ஏதும் பிரச்சனை இருக்குமா என ரசிகர்கள் கருத்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில், 2 புது செல்ல பிராணிகளை வாங்கியதை குறித்து ட்வீட் செய்துள்ளார். இமான் தனது 2வது மனைவி மற்றும் அவரது மகளை வரவேற்கும் விதமாக பதிவிட்டிருந்த டீவீட்டை விமர்சிக்கும் வகையில், அதே மாதிரி, தான் நாய் குட்டிகள் வாங்கியதை ட்வீட் செய்திருப்பது வைரலாகி வருகிறது.
அதன்படி கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பம் சந்தித்து வந்த இன்னல்களுக்கு தீர்வு காணும் விதமாக, இந்த செல்ல பிராணிகளின் வருகை அமைந்ததாகவும், இந்த இரண்டு செல்ல பிராணிகளை தனது மூன்றாவது மற்றும் நான்காவது மகள்களாக ஏற்றுக்கொள்வதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தானும், தனது மகள்களும் உண்மையான அன்பையும், சந்தோஷத்தையும் நீண்ட நாடகளாக மிஸ் பண்ணியதாகவும், இந்த இரண்டு செல்ல பிராணிகளும் விஸ்வாசத்துடன் இருக்கும் என நம்புவதாகவும் விலைமதிப்பற்ற அன்பை கொடுக்கும் டால்மேஷன் குடும்பத்திற்கு எங்களது நன்றி என பதிவிட்டுள்ளார் மோனிகா. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.