பிரம்மாண்ட Blockbuster ஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க மாட்டேன் என விலகிய பகத் பாசில் ? விஜய் சேதுபதி கன்பார்ம் !
பிரபல மலையாள திரையுலக தயாரிப்பாளரான பாசில் அவர்களின் மகன் பகத் பாசில். இவர் நிறைய மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியில், சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் போன்ற தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில், புஷ்பா படத்தில் இவரது வில்லத்தனமான கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. கடந்த 2021 டிசம்பர் மாதம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி செம ஹிட் ஆகிய திரைப்படம் புஷ்பா.
இப்படம் வருவதற்கு முன்பே, இதில் இடம்பெற்ற, ஹே சாமி, ஊ சொல்றியா மாமா, ஸ்ரீ வள்ளி போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதிலும், அல்லு அர்ஜுன் உடைய வித்தியாசமான மேனரிசம், சமந்தாவின் ஐட்டம் சாங் என பிரபலங்கள் முதல் குழந்தைகள் வரை அதை பின்பற்றி வீடியோ பதிவிடுவது ரீல்ஸ் வீடியோ செய்வது என இருந்து வந்தனர். அதிலும், அல்லு அர்ஜுன் தாடியை கோதி வசனம் பேசும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் மேனரிசம் உலகளவில் ட்ரெண்ட் ஆனது.
வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் நடிக்க வைக்க நிறைய நடிகர் நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், விஜய் சேதுபதியிடம் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. விஜய் சேதுபதிக்காக முக்கிய போலீஸ் உயர் அதிகாரி வேடத்தை படத்தில் இணைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
2ம் பாகத்தில் பகத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுனின் மோதல் எப்படி இருக்கப்போகிறது என்ற விறுவிறுப்பான காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்க இப்போது ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. இரண்டாம் பாகத்தில் இருந்து நடிகர் பகத் பாசில் சில காரணங்களால் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வருகிறது. இன்னொரு புறம், பகத் பாசில் வெளியேறவில்லை, விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்கின்றனர்.