சுச்சி விஷயத்தில் தனுஷ் சைலண்ட்டா இருக்க இதுதான் காரணமாம் ! சில வீடியோ & ஆடியோக்களின் பின்னணி ?
ரேடியோ மிர்ச்சி ஆர்ஜே வாக பணிபுரிந்து அதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை சுசித்ரா. இவரது குரல் மற்றும் பேச்சு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு சினிமா டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
திருட்டு பயலே திரைப்படத்தில் மாளவிகா, கேடி திரைப்படத்தில் தமன்னா, கந்தசாமி படத்தில் ஸ்ரேயா, மங்காத்தா திரைப்படத்தில் லட்சுமி ராய், நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் இனியா என பல பிரபல திரைப்படங்களில் நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
பின்னர், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லேசா லேசா திரைப்படத்தில் ஒரு பாடல் பாடியதன் மூலம் பாடகியாக அறிமுகமானார். இவர் பாடிய பாடல்களில், குறிப்பாக தமிழில் போக்கிரி “என் செல்ல பெரு ஆப்பிள்”, கந்தசாமி “excuse me”, வேட்டைக்காரன் “ஒரு சின்ன தாமரை”, சிங்கம் “என் இதயம்”, ஜே ஜே “மே மாசம் 98ல்” போன்ற பாடல்கள் இன்று வரை ரசிகர்கள் பேவரைட்டாக உள்ளது.
2005ம் ஆண்டு இவர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். இதன் நடுவே, பிக் பாஸ் சீசன் 4ல் 49ம் நாள் வெளியேறினர். இவையெல்லாம் மேலாக, சமூக வலைத்தளங்களில் “சுசி லீக்ஸ்” என்ற பெயரில் சினிமா பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அது திரையுலகையே உலுக்கி, பெரிய பூதாகரமாக வெடிக்க, அவருடைய ட்விட்டர் தளம் முடக்கப்பட்டது. இவர் அப்போது போலீஸ் அலுவலகத்தில் தன்னுடைய இணையதள பக்கம் ஹேக் செய்யப்பட்டு, இவ்வாறான விஷயங்கள் வெளியாகின இதற்கு பின்னணியில் நடிகர் தனுஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் தான் கணவர் கார்த்திக் குமார் இருப்பதாக புகார் அளித்திருந்தார். இந்த பிரச்சனைகளுக்கிடையே இவருக்கும் கார்த்திக் குமாருக்கும் இருந்த திருமண பந்தம் முடிவுக்கு வந்தது.
அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வரும் சுசித்ரா, தற்போது பயில்வான் ரங்கநாதன் அவர்களுடன் பேசிய பேசிய போன் உரையாடல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சிறு சிறு முக்கிய கதாபாத்திரங்களிலும், பிரபல காமெடி நடிகராகவும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.
தற்போது தனி யூடியூப் சேனலை தொடங்கி சினிமா வட்டாரத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து பேசி ட்ரெண்டிங் ஆகி வருகிறார். சினிமா துறையில் நடக்கும் விஷயங்களோடு விட்டு வைக்காமல், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பகிர்ந்து வருகிறார். நடிகர்-நடிகைகள் பலரும் இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி புகார் கூறி வருகின்றனர்.
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி மிகவும் கொச்சையாக பேசி வருவதை ரசிகர்கள் பலரும் கமெண்ட் பகுதியில் வசைபாடி வருகின்றனர். இவர் அண்மையில் பாடகி சுசித்ரா குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியிருந்தார்.
இதற்கு சுசித்ரா போன் காலில் திட்டி தீர்த்திருந்தார். தற்போது, சென்னை காவல் துறை ஆணையத்தில் ஒரு புகாரை பதிவு செய்துள்ளார். அதில், கடந்த சில மாதங்கள் முன், யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் என்னைப்பற்றி அவதூறாக பேசி இருக்கிறார்.
நான் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் மற்றும் பாலியல் ஆர்வம் உள்ளவர் என என்னை பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். இது போன்ற குற்றச்சாட்டை இவர் என் மேல் கடந்த சில ஆண்டுகளாகவே பரப்பி வருகிறார். இதனாலேயே எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன.
2017ம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு சுசி லீக்ஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து நான் புகார் அளித்திருந்தேன். அந்த புகார் தொடர்பான போலீஸ் விசாரணையில் தனுஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, கார்த்திக் குமார் உட்பட ஒரு சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தேன். அதேபோல தற்போது பயில்வான் ரங்கநாதன் பின்னணியிலும் அதே நபர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்”.
பயில்வானுடன் விவாதித்த சுச்சி, தன்னைப் பற்றி பேச சொன்னது தனுஷ் தானே என்றும் தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று கேட்டும் விளாசினார். மேலும் தன்னிடம் சில வீடியோக்கள் இருக்கிறது, அதைப்பற்றியும் பேசுங்கள் என்றும் கூறி திணற வைத்தார். அவர் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.
இந்த விவகாரத்தில் தனுஷின் பெயர் அடிப்பட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். தனுஷின் இந்த அமைதிக்கு காரணம் அவர் குறித்த ஏதோ ஒரு ஆதாரம் சுச்சியிடம் இருப்பதுதான் என அதிகம் பேசப்பட்டு வந்தது.
ஏற்கனவே நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததால்தான் ஐஸ்வர்யாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு தனுஷை எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் தான் தற்போது தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து வரை சென்றுள்ளனர் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சுச்சியுடன் மல்லுக்கட்டினால் வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பெயர் கேட்டு விடும் என்ற பயத்தினால் தான் தனுஷ் எதுவும் பேசாமல் உள்ளார் என கூறப்படுகிறது.