அப்டேட்ஸ் உடன் வெளியான மொத்த குடும்பத்துடன் தனுஷ் எடுத்த Latest போட்டோ !
2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் - இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.
காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார்.
தனது திறமை மூலம் பல விமர்சனங்களையும் தாண்டி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார். ஒல்லியாக இருக்கும் இவனெல்லாம் ஹீரோவா என கேலி கிண்டல் பேசியவர்கள் தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றது பார்த்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.
இந்த வருட தொடக்கத்தில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுடனான 18 வருட வாழ்க்கையை முடித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார். அது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. விவாகரத்து பெற்ற தனுஷ் தனது மகன்களுடன் அவ்வப்போது அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மீண்டும் இருவரும் சேரப்போவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.
தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர், டோலிவுட்டில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன், என அடுத்தடுத்து பிசியாக இருந்து வருகிறார் தனுஷ். தற்போது, தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள தி க்ரே மேன் படம் 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்தின் சிங்கிள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி வருகிறது. இதன் நடுவே, இன்று தனுஷ் தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இதன் டீசர் இன்று வெளியாக உள்ளது.
மேலும், செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணையும் படம் ‘நானே வருவேன்’ படத்தின் போஸ்டரும் நேற்று வெளியானது. அடுத்தடுத்து வரும் அப்டேட்களால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், தனுஷ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் தனுஷ், செல்வராகவன், தந்தை கஸ்தூரி ராஜா, தாய், சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் என கூட்டு குடும்பமாக எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.