Viral Video: பா.ரஞ்சித் பட பூஜையில் விபூதியை தவிர்த்த விக்ரம் & ஜி.வி.பிரகாஷ்.. கேட்டு வைத்துக்கொண்ட சாண்டி..
பிரபல முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். விளம்பர படங்களில் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆரம்ப காலங்களில் பெரிதும் பிரபலம் அடையாத இவர், சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இவர் நடிகர் மட்டுமல்லாது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். காசி, ஜெமினி, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மைல்கல்லாக அமைந்தது.
நடிப்பிற்காக தனது உடல்நிலையும் பொருட்படுத்தாது, தன்னை வருத்தி தனக்கான கதாபாத்திரத்தில் நேர்த்தி கொடுப்பவர். இவரது மகன் துருவ் விக்ரம், தற்போது, ஆதித்யா வர்மா, மஹான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார். 2019ம் ஆண்டு கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு பின்னர் மஹான் திரைப்படத்தில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், அப்படமும் OTT தளத்தில் ரிலீஸ் ஆன நிலையில், அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் விக்ரமின் நடிப்பை பார்க்க பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.
இந்நிலையில், விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு மாரடைப்பாக இருக்கலாம் என கருதப்பட்டு வந்த நிலையில், அந்த செய்தி உண்மை இல்லை Chest discomfort காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் குறிப்பிட்டனர். பின்னர், 2 நாட்களில் குணமாகி வீடு திரும்பினார் விக்ரம்.
அதனைத் தொடர்ந்து, கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்தார். தற்போது, விக்ரம் 61ஆவது திரைப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்நிலையில், இதற்கான பூஜை இன்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் கலந்துகொண்டார்.
அதேபோல் படக்குழுவினர் விக்ரம், பா ரஞ்சித், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த பூஜையில் கலந்துகொண்ட குழுவினருக்கு அர்ச்சகர் விபூதி இட்டு மாலை அணிவித்து நிகழ்ச்சியை நடத்தி இருந்தார்.
அப்போது, விபூதி வைத்த அர்ச்சகரிடம் நடிகர் விக்ரம் வேண்டாம் என்று பணிவாக தவிர்த்து விட்டார். விக்ரம் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்ம் விபூதி வைக்க வேண்டாம் என அர்ச்சகரிடம் தெரிவித்தார். ஆனால், நடன இயக்குநர் சாண்டி தனக்கு விபூதி வைத்து விடுமாறு கேட்டு வைத்துக் கொண்டார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.