'நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான்.. வளர்ப்பு அப்படி.' காட்டமாக பதிவிட்ட சின்மயி

chinmayi posts screenshot of netizen who commented wrongly and posted her message

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடியதன் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி.

chinmayi posts screenshot of netizen who commented wrongly and posted her message

இதையடுத்து பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய சின்மயி, குறுகிய காலத்திலேயே பல பேமஸ் பாடல்களை பாடியதன் மூலம் பிரபலம் அடைந்தவர். வாராயோ வாராயோ, சர சர சாரா காத்து, இதயத்தில் ஏதோ, கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான 96 படத்தில் அவர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது குறிப்பிடத்தக்கது.

chinmayi posts screenshot of netizen who commented wrongly and posted her message

இதனிடையே கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த மீடூ புகார் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தன்னுடையை நிலைப்பாட்டில் தீர்க்கமாக உள்ள சின்மயி, தனது கருத்துக்களை இடைவிடாது பதிவிட்டு வருகிறார். மேலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

chinmayi posts screenshot of netizen who commented wrongly and posted her message

இதனிடையே, 2014ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான ராகுல் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது, சின்மயி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தைகளின் பெயர்களோடு, அவர்களின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர் மகிழ்ச்சியை பதிவு செய்தார்.

chinmayi posts screenshot of netizen who commented wrongly and posted her message

பொதுவாக பிரபலங்கள் பலர் கர்ப்பமாக இருக்கும்போது போட்டோஷூட் நடத்துவதும், வளைகாப்பு செய்வதும் அதன் புகைப்படங்களை தங்கள் சமூக வலைதளத்தில் பதிவிடுவதும் வழக்கமான ஒன்று. ஆனால், சின்மயி தான் கர்ப்பமாக இருப்பதை பற்றி ஒரு பதிவை கூட போடவில்லை. சின்மயிக்கு 37 வயது ஆனதால் சின்மயி வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருப்பார் போன்ற விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்தார்.

chinmayi posts screenshot of netizen who commented wrongly and posted her message

அதில் ‘நான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிடாததால் நிறைய பேர் எனக்கு DM மூலம் மெசேஜ் செய்து நான் வாடகை தாய் மூலம் தான் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தேனா என்று கேள்விகளை கேட்டு வருகின்றனர். என்னை பாதுகாத்துகொள்ள எனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும். என்னுடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படக்களை சமூக வலைதளத்தில் பதிவிட மாட்டேன். ‘ என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், தனது கர்ப்பகால புகைப்படத்தையும், தனது இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

chinmayi posts screenshot of netizen who commented wrongly and posted her message

ஆனால் சிலர் வைரமுத்துவையும் சின்மயியையும் தொடர்பு படுத்தி வைரமுத்துவிற்கு வாழ்த்துக்கள் என்று தவறான பொருள் கொள்ளும்படி பதிவிட்டு வந்தனர். இதை பார்த்த கடுப்பாகிய சின்மயி ஊர் பொறுக்கிகள் ஊர் பொறுக்கிகள் தான், அவர்களை என்றும் திருத்தவே முடியாது. ஏனென்றால் அவர்களின் வளர்ப்பு அப்படி என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த புகைப்படத்தை நான் பதிவிட்டேன், இதற்கு தமிழர் ஒருவர் வந்து பதில் அளித்திருக்கிறார். நான் எனது கர்ப்ப கால புகைப்படத்தை வெளியிட்டதற்கு உண்மையான காரணம் இருக்கிறது.

chinmayi posts screenshot of netizen who commented wrongly and posted her message

தமக்கு ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டதால் தான் புகைப்படத்தை வெளியிடவில்லை. ஆனால் என்னை பாலியல் ரீதியாக சீண்டியவரை என் குழந்தைகளின் தந்தை என்று கூறுகிறார். நம்ம ஊர் பொறுக்கிகள், பொறுக்கிகள் தான். ரத்தத்திலேயே ஊறுனது. அவர்களின் வளர்ப்பு அப்படி என்று காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

chinmayi posts screenshot of netizen who commented wrongly and posted her message

Share this post