'அவங்க 2 பேர விட தெருநாய் கூட பாதுகாப்பா இருப்பேன்..' ராதா ரவி & வைரமுத்துவை பற்றி அதிரடியாக பதிவிட்ட சின்மயி !

Chinmaiyi posts about radha ravi and vairamuthu in a post comparing dog

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடியதன் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி.

இதையடுத்து பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய சின்மயி, குறுகிய காலத்திலேயே பல பேமஸ் பாடல்களை பாடியதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

இதனிடையே கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த மீடூ புகார் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Chinmaiyi posts about radha ravi and vairamuthu in a post comparing dog

இதற்காக பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தன்னுடையை நிலைப்பாட்டில் தீர்க்கமாக உள்ள சின்மயி, தனது கருத்துக்களை இடைவிடாது பதிவிட்டு வருகிறார். மேலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில், பெண் ஒருவர் ஆண்களை தெரு நாய்களோடு ஒப்பிட்டு பேசியதை எதிர்த்து, பிரியாணி மேன் என்பவர் தனது யூடியூப் சேனலில் கண்டனத்தை பதிவு செய்தது மட்டுமின்றி, கொச்சையாக விமர்சித்திருந்தார்.

இந்த விஷயம் பாடகி சின்மயி பார்வையில் விழ, இதைக்கேட்டு கொதித்தெழுந்து தக்க பதிலடியும் கொடுத்துள்ளார்.

அதற்கு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உண்மையில் மனிதர்களைவிட நாய்கள் தான் பெண்களுக்கு நம்பகமான ஒன்றாக இருக்கின்றது. என்னைப் பொருத்தவரை நான் ஒரு ரூமில் ராதாரவி மற்றும் தமிழ் கவிஞருடன் இருப்பதைவிட ஒரு தெருநாய் உடன் இருந்தால் பாதுகாப்பாக இருப்பேன்” என கூறியிருந்த சின்மயி பதிவு வைரலாகி வருகிறது.

Chinmaiyi posts about radha ravi and vairamuthu in a post comparing dog

Share this post