பெற்றோர்களே உஷார்.. விக்ரம் படம் பார்த்த LKG படிக்கும் சிறுவன் செய்த அதிர்ச்சிகரமான செயல்கள் !
அரசியல், நடிப்பு, பிக் பாஸ் என பிசியாக வலம் வந்த கமல் ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகியுள்ளது விக்ரம் திரைப்படம்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றது.
தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் ஆரவாரத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் தொழில் செய்யும் விஜய் சேதுபதி, சீக்ரெட் ஏஜென்ட்டாக கமல் ஹாசன், கமல் வளர்ப்பு மகனாக காளிதாஸ், உளவாளியாக பகத் பாசில் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை நேர்த்தியாக தந்திருக்கின்றனர்.
கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ரோலில் நடித்து மிரட்டி இருக்கிறார் சூர்யா . படத்தின் இறுதியில் கைதி 2 மற்றும் விக்ரம் 3 ஆகிய படங்களுக்கு லீடு கொடுத்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் லோகேஷ்.
இந்நிலையில், இப்படத்தினால் வெளியாகியுள்ள விளைவு குறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தை பார்த்த குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
சென்னையில் எல்கேஜி படிக்கும் சிறுவன் ஒருவன், விக்ரம் படத்தை பார்த்து விட்டு வந்து, வீட்டில் இருக்கும் பொருட்களை கத்தியால் குத்தி கிழிப்பது, தானாக கீழே விழுவது போன்ற செயல்களிலில் ஈடுபட்டுள்ளார். எனவே, விக்ரம் படத்திற்கு சென்றால் சிறுவர்களை வீட்டில் விட்டு செல்வது நல்லது பெற்றோர்கள் யோசனை கூறி வருகின்றனர்.