கதை சொல்லட்டுமா டாஸ்க் - 'தனலட்சுமி சொன்னது எல்லாமே பொய்'.. ரசிகர்கள் என்ன சொல்லிருக்காங்க பாருங்க!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்பித்து முழுதாக 1 வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில் தனலட்சுமி சொன்னது எல்லாமே பொய் என நெட்டிசன்ஸ் கருத்துக்கூறி வருகின்றனர். கதை சொல்லட்டுமா டாஸ்கில் அழுகாச்சி கதை டாஸ்க் ஆரம்பமாகி உள்ளது.
இதில் நேற்று தனலட்சுமி தனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை கூறினார். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அப்பா எங்களை விட்டுட்டு போய்விட்டார் என்னையும் தம்பியையும் அம்மாத்தான் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். அம்மாவை மிஸ் பண்றேன் நான் வீயோ எடுப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் என்னை திட்டுவார்கள் ஆனால், என் அம்மா எனக்காக அவங்களிடம் சண்டை போடுவாங்க. என் அம்மாவை நான் நிறைய திட்டி இருக்கிறேன். அது அப்போ தப்புனு எனக்கு தெரியவில்லை ஆனால் இப்போத்தான் அது தப்புனு எனக்கு தெரியுது.
அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன். பிக் பாஸ் வீட்டுக்கு போனா உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குனு அம்மா சொன்னாங்க. செயினை விற்று எனக்கு இந்த டிரஸ் எடுத்து கொடுத்தாங்க என்று கண்ணீருடன் கூறினார். எல்லாமே பொய் இந்நிலையில், இணையத்தில் ஒருசில நெட்டிசன்ஸ் தனலட்சுமி சொல்வது எல்லாமே பொய் அவர் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வரவில்லை என கூறி குட்டையை குழப்பி உள்ளனர். அதாவது தனலட்சுமி ரீல்ஸ் வீடியோவில் பணத்தை எரிப்பது, பாலை சாலையில் கொட்டுவது என பணத்தை ஒரு பொருட்டாகவே பார்க்காதவர் இதனால், இவர் சொல்வது எல்லாமே பொய் மக்களிடன் சிம்பதிக்காக இப்படி பேசியிருப்பதாக கூறி வருகின்றனர்.