மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் காம்போ.. கன்யாகுமரியில் முதல்கட்ட படப்பிடிப்பு !
நந்தா, பிதாமகன், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து 4 முறையாக கூட்டணி அமைக்கும் சூர்யா - பாலா. இவர்கள் காம்போவில் வெளியான அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் ஷூட்டிங் ஆரம்பிற்கும் முன்பே இப்படத்தின் ஆர்வம் ரசிகர்களிடையே கூடியுள்ளது.
2டி என்டெர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் இப்படம் தயாராகவுள்ளது. கிராமப்புறம் சார்ந்து எடுக்கப்படும் இப்படத்தில், காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் தொடங்கிய நிலையில், இதன் படப்பிடிப்பு முதல் கட்டமாக 45 நாட்கள் கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.
Share this post