சக போட்டியாளரால் கண்ணீர் விட்டு அழுத நடிகை.. 2 நாள்'ல இப்படியா.. வைரலாகும் போட்டோஸ் !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், சீரியல் நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, சின்னத்திரை நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, மாடல் மற்றும் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, சன் மியூசிக் தொகுப்பாளர் வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தற்போது, இதில் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் கொடுப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், புதிய டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளார். அந்த டாஸ்க்கில், இதுவரை இந்த வீட்டில் இருக்கும் நபர்கள் மற்ற ஒரு சில போட்டியாளர்களுடன் பழகிக்கொள்ளாமல் இருக்குறீர்கள்.
அப்படி நீங்கள் பழக வேண்டும் என்று நினைக்கும் நபரை தேர்ந்தெடுத்து நீங்கள் ஏன் அவருடன் பழக வேண்டும் என்பதை சொல்லவேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் கலந்துகொண்ட அசல் கோலார், ஆயிஷாவை அழைத்து பேசுகிறார்.
அப்போது ‘சொல்லு டா’ என்று ஜாலியாக ஆயிஷா கூறியுள்ளார். இதை கேட்டவுடன் ‘என்னை வாடா போடா’ என்று கூப்பிடாதீர்கள் என கூறினார். இந்த செயல் ஆயிஷாவிற்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. இதன்பின், ‘சரி சொல்லுங்க’ என்று ஆயிஷா கூறவே, ‘என்னை வாங்க போங்க’ என்றும் கூப்பிடாதீர்கள் என்று அசல் கோலார் கூற மேலும் ஆயிஷாவிற்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது.
இதனால் டாஸ்க் முடிந்தவுடன் தனியாக சென்று அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஆயிஷா. இதன்பின் இந்த விஷயத்தை போட்டியாளர்கள் சில ஆயிஷாவிடமும், அசல் கோலார் இடமும் பேசி முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.