அனுபமா ஏறிய காரின் டயரை பஞ்சர் செய்த ரசிகர்கள்.. இவ்ளோ கோபம் ஆகாதுங்க !
மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தில் சுருள் முடியோடு ரசிகர்களை கவர்ந்த அனுபமா, அதனைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தெலுங்கு மொழிகளில் நடிக்கத் தொடங்கிய அனுபமா, தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி ரசிகர்களை கவர்ந்தார். உடல் எடை மெலிந்து ஸ்லிம் பிட்டாக மாறியுள்ள அனுபமா, தள்ளி போகாதே என்னும் தமிழ் படத்தில் நடித்தார்.
தற்போது, தெலுங்கு மொழியில் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை அனுபமா, தெலங்கானா சூர்யா பேட்டையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். நடிகை வருவதை அறிந்து அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதையடுத்து காரில் வந்திறங்கிய அனுபமா, ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்று திறப்பு விழாவில் பங்கேற்றார்.
நிகழ்ச்சி முடிந்து காரில் ஏற வெளியே வந்த அனுபமாவை பார்த்ததும் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய அனுபமாவை பாதுகாவலர்கள் மீட்டு, அவரை காரில் ஏற்றி விட்டனர். அவருடன் செல்பி எடுக்க முடியாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், அவரது கார் செல்ல விடாமல் ரகளை செய்து, கோபத்தில் அவரது காரின் டயரில் காற்றை பிடுங்கி விட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ரசிகர்களை விரட்டி அடித்து, பின்னர் அனுபமாவை வேறொரு காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
.