'மணிக்கணக்கா phoneல அப்றம்..அப்றம்..னு கொஞ்சி சினுங்குற சினிமா காதல் இல்ல எங்க காதல்' உருக்கமுடன் பதிவிட்ட அனிதா!
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் வரவேற்பு பெற்று வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர்களை பார்த்ததுண்டு. அந்த வரிசையில், தொகுப்பாளர்களும், செய்தி வாசிப்பாளர்களும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகளுக்கு இணையாக பேன் பாலோயர்ஸ் பெற்று பிரபலம் அடைவதும் தற்போது அரங்கேறி வருகிறது.
இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளங்கள், ஆர்மி, fan page உருவாகி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, மணிமேகலை, DD, பிரியங்கா, கண்மணி, ரம்யா என பலரும் உள்ளனர். இதில் ஒரு சிலர் சினிமா மற்றும் சின்னதிரைகளில் நடிக்க ஆர்வம் காட்டியும் வருகின்றனர். அந்த வகையில், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் அனிதா சம்பத்.
தற்போது, சன் டிவியில் 6 மணி செய்திகள் மற்றும் வணக்கம் தமிழா நிகழ்ச்சிகளில் தோன்றி வருகிறார். இது மட்டுமின்றி, சர்க்கார், காலா, காப்பான், 2.0, ஆதித்யா வர்மா, உள்ளிட்ட படங்களில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். இப்படி பிரபலம் அடைந்த அனிதா சம்பத்திற்கு, பிக் பாஸ்’ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலப்படமான விமர்சனங்கள் இவர் மீது வந்த போதிலும் அதை பற்றி பெரிதும் கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு சமீபத்தில் OTT தளத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும், இவரது சில வீடியோக்கள் செம வைரல் ஆனது. தற்போது தனக்கென்ற தனி யூடியூப் சேனல்’ம் நடத்தி வருகிறார்.
2019ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான பிரபா என்பவரை திருமணம் செய்து கொண்ட அனிதா, இந்த ஜோடி பிக் பாஸ் பின்னர் மிக பிரபலம். அனிதாவிற்கு மேக்கப் மீது ஆர்வம் அதிகம், அதனை பற்றிய வீடியோக்களை அதிகம் பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் மந்திரப்புன்னகை தொடரில் ஹீரோயின் தோழியாக நடிக்கிறார்.
சமீபத்தில், சொந்த வீடு ஒன்றை தங்களது பெரும் முயற்சியால் வாங்கியுள்ளதையும், அதன் புகைப்படங்களையும் சந்தோசமாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில், அனிதா சம்பத் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
அதில், என் “housing board anitha” to “house owner Anitha Sampath” பயணம் அவ்வளவு எளிதானது இல்ல. நான் விடியற்காலையில் எழுந்து செய்தி வாசிக்க போகும் போது வீட்டில் எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க. நான் வேலை முடித்து விட்டு லேட்டாக வரும் போது எல்லாரும் தூங்கிடுவாங்க. அப்பா – அம்மா கூட நேரம் செலவிட முடியவில்லை என்று எனக்கு கவலையாக இருக்கும்.
ஆனாலும், சின்ன ஷோ, பெரிய ஷோனு பாக்காமல் நேரம் காலம் பாக்காமல் நம்ம குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரனும் உண்மையாக, நேர்மையாக, நல்லா சம்பாதிக்கணும் என்று மட்டுமே நினைத்து உழைப்பேன். எனக்கு பக்க பலமாக இருந்தது பிரபா. மணிக்கணக்காக phoneல அப்றம்..அப்றம்..னு கொஞ்சி சினுங்குற சினிமா காதல் இல்லை எங்க காதல்.
ஆரம்பத்தில இருந்தே ரொம்ப முதிர்ச்சியடைந்த காதல். ரெண்டு பேரும் மீடியா. ஆனால், வேற வேற வேலைகள். எங்க குடும்பங்கள், எங்க முன்னேற்றம், சேமிப்பு, எங்க வேலை, எங்க கனவுகள், முன்னேறுவது பத்தி தான் அதிகம் பேசிப்போம். இதன் நடுவே எங்க அன்பு, பாசம், காமெடி, சிரிப்பு, காதல் எல்லாமும் சைக்கிள் வாங்க முடியாமல் வடபழனி to கோவூர் நடந்தே போற பிரபா கதை.
நாப்கின் வாங்க காசில்லாமல் 2km பீரியட்ஸ் கரையோடயே நடந்து ட்யூஷன் எடுக்கிற வீட்ல நாப்கின் வாங்கி மாத்துன என்னோட கதை. இப்படி எங்க சொந்த struggle stories தான் எங்களுக்கு மாத்தி மாத்தி inspirations. எங்க 6 வருட காதல், ரெண்டு பேருடைய கனவையும் ஒரே கனவா ஆக்குச்சு. We chased our dreams together and this happened. 29 & 30 வயசுல சொந்த வீடு. இவ்வளவு இளமைக்காலத்துல சொந்த வீடு வாங்குனது எங்க ரெண்டு பேரு குடும்பத்திலயும் இதுதான் முதல்முறை என்று கூறி இருக்கிறார்.