சீரியலுக்கு திரும்பும் ஆல்யா மானசா.. இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு ! இந்த சீரியலா ?
விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோ, சீரியல், மேடை நிகழ்ச்சிகள் என அதில் ஒளிபரப்பாகும் அனைத்தும் நல்ல வரவேற்பை பெறுவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில், இப்படி இந்த சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும் பிரபலம் ஆகி விடுவார்கள் என சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு பரவலாக உள்ளது.
அப்படி, ராஜா ராணி சீசன் 1ல் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடியாக நடித்திருந்தனர். இதன் மூலம் பிரபலம் அடைந்த இவர்கள, ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ஆலியா மானசாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இதனால், ராஜா ராணி 2வில் நடித்து வந்த இவர், சீரியலில் இருந்து விலகிவிட்டார். மேலும், இனி அந்த சீரியலில் என்றும் அறிவித்தார். ஆனால், இன்னும் சில மாதங்களுக்கு பின், வேறு சீரியலில் நடிப்பார் எனவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், இன்ஸ்டாவில் ரசிகர்களிடம் சாட்டில் உரையாடிய ஆலியா மானசா. இன்னும் சில மாதங்களில் சீரியலுக்கு திரும்புவதாக தெரிவித்திருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை வேடத்தில் நடிக்கும் காவ்யாவிற்கு பட வாய்ப்புகள் வந்ததன் காரணமாக அவருக்கு பதிலாக ஆலியா நடிக்க வருவதாக ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.