முல்லை வேடத்தில் இனி இவருக்கு பதில் இவர் ! இது செம ட்விஸ்ட் !
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று. அண்ணன் தம்பி பாசம், கூட்டுக் குடும்பம் பற்றிய இந்த கதை மக்கள் நடுவே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது. தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர். குழந்தை பிறக்க லட்ச கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெற கடைசியில் அது தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில், முல்லை கதாபாத்திரம் தொடர்பாக அதிரடியாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதாவது சீரியல் தொடங்கும் போது முதலில் முல்லை வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா, அவரது எதிர்பாராத இறப்பின் காரணமாக ஜாடையில் அவரை போலவே இருக்கும் காவ்யா முல்லையாக நடித்து வருகிறார்.
இப்போது காவ்யாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே, அவரால் தொடரில் தொடர்ந்து நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய முல்லையாக யாரு நடிக்கவிருக்கிறார் என எதிர்பார்ப்பில் இருக்க, ராஜா ராணி 2 தொடரில் இருந்து பேறு காலத்திற்காக வெளியேறி ஆலியா மானசா நடிக்கவிருப்பதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இது குறித்த எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.