அஜித் மேனேஜர் திடீரென வெளியிட்ட பதிவு ! மறைமுகமாக அஜித் இத தான் சொல்ல வராரா ?
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார்.
அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இதன் நடுவே, AK62 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியானது.
அஜித் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் பிரபல நடிகை ஷாலினி.
ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 50திற்கும் மேற்பட்ட படங்களில் வெற்றிகரமாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
7 வருட இடைவேளைக்கு பிறகு கதாநாயகியாக என்ட்ரி கொடுத்த ஷாலினி, மலையாளம் மற்றும் தமிழில் 12 படங்களில் மட்டுமே நாயகியாக தோன்றினார்.
விஜய் அஜித், மாதவன் என முன்னணி நாயகர்களுடன் ஷாலினி நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தது.
1999ல் அமர்க்களம் படப்பிடிப்பில் காதலில் விழுந்த அஜித்-ஷாலினி, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட இரு படங்களில் நடித்தார். அஜித்குமார்-ஷாலினி தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
தற்போது, அஜித் நடிக்கும் திரைப்படங்கள் குறித்த அப்டேட் அல்லது புகைப்படங்கள் ஏதாவது வெளியாகாதா என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த நிலையில், அஜித் குமார் அவர்களது மேனேஜர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தனக்கென்று தனி சமூக வலைதள பக்கம் ஏதும் வைத்துக்கொள்ளாத அஜித், தனது மேனேஜர் வாயிலாக அறிக்கை வெளியிடுவார்.
இதற்கு முன்னர், தன்னை யாரும் இனி தல என குறிப்பிட வேண்டாம் என்பதனை தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களின் சமூக வலைதள பக்கத்தின் வழியே அறிக்கையாக வெளியிட்டு இருந்தார். தற்போது, ஒரு மீம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். ஒரு கணவன் மனைவி ஜோடி கழுதையை வைத்து எது செய்தாலும் அதை பார்பவர்கள் எதாவது ஒரு கருத்து கூறிக்கொண்டே இருப்பார்கள்.
இதே போல, நான் எது செய்தாலும் உலகம் பேசிக்கொண்டே தான் இருக்கும், எல்லோரையும் நம்மால் திருப்தி படுத்த முடியாது என்ற கருத்தை அந்த மீம் புகைப்படத்தின் வாயிலாக கூறியுள்ளார்.
To whom so ever it may concern!
— Suresh Chandra (@SureshChandraa) May 30, 2022
Unconditional love.
Ajith pic.twitter.com/v6c4cmB4f7