மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்த தனுஷ் - ஐஸ்வர்யா? நவம்பர் 18ம் தேதி ரஜினி வீட்ல கொண்டாட்டம் தான்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் பிரபல நடிகர் தனுஷ் அவர்களது மனைவியும் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
இவர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, வை ராஜா வை என்னும் படத்தையும் இயக்கினார். இதுமட்டுமின்றி, விசில் படத்தில் நட்பே நட்பே பாடல் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன்மேல ஆசதான் பாடல் என இரண்டையும் பாடியுள்ளார்.
மேலும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமாசென் அவர்களுக்கு டப்பிங் பேசியதும் இவர்தான் இவர்தான். இப்படி பல்வேறு திறமைகளை கொண்ட இவர், தற்போது தனது பிட்னஸ் மீது ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், தனது யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
விவாகரத்துக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது.
தற்போதைய தகவலின்படி, விவாகரத்து அறிவித்த பின்னர், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், இதற்குமுன் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகிறார்களாம். தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முன் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள்.
அந்த வீட்டிற்கு, தற்போது இருவரும் அடிக்கடி சென்று வருவதாகவும், அந்த வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதாகவும் பிரபல மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். விவாகரத்துப்பின் இருவரும் ஒரே வீட்டிற்கு சென்று வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கோவம் குறைந்து மீண்டும் தனுஷுடன் சேரும் முடிவில் ஐஸ்வர்யா இருப்பதாக கூறப்பட்டாலும், இருவர் தரப்பில் இருந்தும் இது வரை எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
சமீபத்தில், தனுஷ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மகன்களுக்காக கலந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும், ஐஸ்வர்யா தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷணிக்கு தனது தந்தை பெயரையும் சேர்த்து இருந்தார். அதன் பின்னர் இவர்களின் விவாகரத்து குறித்து இரு தரப்பினரும் எந்தவித கருத்தையும் வெளிகாட்டாமல் இருந்து வந்தனர். ஆனால், தற்போது, ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அப்போது சமரச பேச்சுவார்த்தையில் விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த உண்மை தன்மையை இரு குடும்பத்தினர் உறுதிப்படுத்தினால் தான் தெரிய வரும். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனுஷ்-ஐஸ்வர்யா திருமண நாளான நவம்பர் 18ம் தேதி வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.