கணவருக்கு பாதபூஜை செய்த போட்டோ பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை ப்ரணிதா !
2010ம் ஆண்டு கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. இதனைத் தொடர்ந்து, தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழில், உதயன் என்னும் திரைப்படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்னும் படத்திலும் நடித்திருந்தார்.
தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்த பிரணிதா, 2021ம் ஆண்டு நிதின் ராஜு என்னும் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனை வீடியோவாக பிரணிதா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.
இந்நிலையில், அவர் பீமனா அமாவாசை, அதாவது ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்றைய முன் தினம் தனது கணவருக்கு பாத பூஜை செய்திருக்கிறார் ப்ரணிதா. அந்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பல ஊர்களில் இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வழக்கத்தின் படி அவர் செய்த பூஜை குறித்து சில நெட்டிஷன்கள் வரவேற்றுள்ளனர்.
அதே சமயத்தில் சிலர், இது போன்ற பூஜைகள் தேவையற்றது மனிதருக்கு பூஜை செய்வது தேவையில்லாத விஷயம் என்றும் கூறி வருகின்றனர்.