'தெருத்தெருவா சோப்பு விக்குறேன்.. ஒருவேளைதான் சாப்பாடு' பிரபல நடிகை ஐஸ்வர்யாவின் அதிர்ச்சி பேட்டி!
பழம்பெரும் நடிகையான லக்ஷ்மி அவர்களின் மகள் ஐஸ்வர்யா திரையுலகில் மிக பிரபலம். தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், நியாயங்கள் ஜெய்க்கட்டும் என்னும் படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்தார்.
அதன் பிறகு, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஹீரோயின் முதல் துணை கதாபாத்திரங்கள் வரை நடித்துள்ளார். ஆறு, அபியும் நானும், சாமி 2 போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாது நிறைய சீரியல் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது நிலை என்னவென்று யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
நான் இப்போது வீடுவீடாகச் சென்று சோப் விற்கிறேன். அதில்தான் நானும் என் மூன்று பூனைகளும் வாழ்கிறோம். ஒரு நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடுகிறேன். இப்போது எனக்கு ஏதாவது ஒரு சீரியலில் சான்ஸ் வேணும். சினிமாவைவிட என்னை சீரியல்தான் வளர்த்தது.
அதனால் ஏதாவது ஒரு மெகா சீரியலில் எனக்கு சான்ஸ் கிடைத்தால் நன்றாக இருக்கும். மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
மேலும், அவர் நடித்த படங்கள் பொது விஷயங்கள் என பலதையும் பற்றி அவர் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.